Thursday, July 3, 2008

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா?


ஸ்கிரின் சேவருக்கு பாஸ்வேர்ட் எப்படி செட் செய்வது? எதற்காக செட் செய்திட வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது. இதனைப் பல வாசகர்கள் கேட்டுள்ளதால் இங்கு அதற்கான தகவல்களைத் தந்துவிடு வோம்.

இது மிகவும் எளிய ஒரு வேலைதான். முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்குக் கொண்டு வரவும்.

இங்கு டிஸ்பிளே ஐகானைக் கண்டு பிடித்து கிளிக் செய்திடுங்கள். (விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதனை உறுதி செய்திடல் வேண்டும். அப்போது தான் டிஸ்பிளே ஐகான் பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் கிடைக்கும். கிளாசிக் வியூ அமைத்திட கண்ட்ரோல் பேனலின் இடது பக்கம் இருக்கும் பிரிவில் அதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்தால் போதும்) இனி உங்கள் முன் இருக்கும் விண்டோவில் ஸ்கிரீன் சேவர் என்ற டேபை அழுத்தவும்.

இதில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஸ்கிரீன் சேவரைத் தேர்ந்தெடுக்கவும். அப்போதே நீங்கள் எவ்வளவு நேர அவகாசத்தில் கம்ப்யூட்டரில் பணி ஏதும் இல்லை என்றால் ஸ்கிரீன் சேவர் தோன்ற வேண்டும் என்பதனையும் அங்கு செட் செய்திடலாம். நீங்கள் விண்டோஸ் 95, 98, ME, NT அல்லது 2000 பயன்படுத்துபவராக இருந்தால் “Password protected” என்று இருக்கும் கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

பின் ஸ்கிரீன் சேவருக்கென ஒரு பாஸ்வேர்டை அமைக்கவும். ஏற்கனவே அமைத்திருந்தால் அருகே உள்ள பட்டனைக் கிளிக் செய்து பாஸ்வேர்டை மாற்றலாம். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவ ராக இருந்தால் நீங்கள் லாக் இன் ஸ்கிரீனில் என்ன பாஸ்வேர்ட் பயன்படுத்தி உள்ளே நுழைந்தீர்களோ அதனையே பயன்படுத்தலாம். ஆனால் அதுபோல எந்த பாஸ் வேர்டும் தராமல் விண்டோஸ் இயக் கத்தைப் பயன்படுத் தும் பழக்கம் உடையவராக இருந்தால் பாஸ்வேர்ட் ஒன்றை உருவாக்க வேண் டும்.

அவ்வாறு அமைத்த பின் மீண்டும் டிஸ்பிளே ஐகான் சென்று ஸ்கிரீன் சேவர் டேபை அழுத்தி அங்கு “On resume, display Welcome screen” என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட நேரம் எந்த பணியும் மேற்கொள்ளாமல் கம்ப்யூட்டரை வைத்திருந்தால் ஸ்கிரீன் சேவர் தோன்றும். பின் அதற்கு பாஸ்வேர்ட் கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதுவும் ஒரு பாதுகாப்பு வழிதான்.

No comments: